திங்கள், 19 ஜூலை, 2021

 

அவ்வையார் நூல்கள் (Avvaiyar Books)

மூதுரை (MOOTHURAI)

வெண்பா : 29

 

மருவு இனிய சுற்றமும் வான் பொருளும் நல்ல
உருவும் உயர் குலமும் எல்லாம் - திரு மடந்தை
ஆம் போது அவளோடும் ஆகும்; அவள் பிரிந்து
போம் போது அவளோடும் போம்.
விளக்கம்:

 

ஒருவனைச் சூழ்ந்து வாழும் இனிய சுற்றமும், அவனுடைய பெரும் செல்வமும், அவன் அழகும், அவன் குலப் பெருமையும், லக்ஷ்மி கடாக்ஷம்  அவனுடனே இருக்கும் வரையில் தான். அவள் (லக்ஷ்மி கடாக்ஷம்) அகலும் போது இவையனைத்தும் போய் விடும்.

Description :

Happy circle that surrounds a person, his great wealth, his beauty, his clan pride, is as long as Goddess Lakshmi Blessing is with him. All this will go away when she (Lakshmi Kataksham) leaves.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஔவையார் பாடல்கள்

  ஔவையார் பாடல்கள் ஆத்தி சூடி 106. வேண்டி வினை செயேல் தெரிந்தே தீய செயல்களை செய்யாதே.   107. வைகறைத் ...