சனி, 26 ஜூன், 2021

                      அவ்வையார் நூல்கள் (Avvaiyar Books)

மூதுரை (MOOTHURAI)

வெண்பா : 6

உற்ற இடத்தில் உயிர் வழங்கும் தன்மையோர்
பற்றலரைக் கண்டால் பணிவரோ? கல் தூண்
பிளந்து இறுவது அல்லால் பெரும்பாரம் தாங்கின்
தளர்ந்து வளையுமோ தான்

விளக்கம்:

கல் தூண் பெரிய பாரத்தையும் ஏற்றும்போது  உடையுமே அன்றி தளர்ந்து வளைந்துவிடுவதில்லை. அதுபோல தக்க சமயத்தில் தன் உயிரையும் வழங்கும் தன்மையுள்ளவர் நற்பண்புகளின் மேல் பற்று இல்லாதவரைக் கண்டு பணிவதில்லை

Description :

The stone pillar is not flexible and does not bend when loaded more and more. Like that He who gives his life in due time does not see and obey those who are not obsessed with virtues





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஔவையார் பாடல்கள்

  ஔவையார் பாடல்கள் ஆத்தி சூடி 106. வேண்டி வினை செயேல் தெரிந்தே தீய செயல்களை செய்யாதே.   107. வைகறைத் ...