திங்கள், 12 ஜூலை, 2021

 

அவ்வையார் நூல்கள் (Avvaiyar Books)

மூதுரை (MOOTHURAI)

வெண்பா : 22

 

எழுதியவாறே தான் இரங்கும் மட நெஞ்சே

கருதியவாறு ஆமோ கருமம்? - கருதிப் போய்க்
கற்பகத்தைச் சேர்தோர்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல்
முற்பவத்தில் செய்த வினை.

விளக்கம்:

 

மட நெஞ்சே!  என்னதான் திட்டத்தோடு கற்பக மரத்திடம் சென்றாலும், எட்டிக்காயே கிடைத்ததென்றால் அது நம் முன் வினைப் பயனே.  விதியில் எழுதியுள்ளபடிதான் நமக்குக் கிடைக்குமே அல்லாது நாம் நினைப்பதெல்லாமா நடந்து விடும்?

Description :

 Oh, Idiotic mind, don’t expect good only, you will get good or bad based on your fate, no matter of plan and attempts to grab good things.



ஞாயிறு, 11 ஜூலை, 2021

 

அவ்வையார் நூல்கள் (Avvaiyar Books)

மூதுரை (MOOTHURAI)

வெண்பா : 21

 

இல்லாள் அகத்து இருக்க இல்லாதது ஒன்று இல்லை
இல்லாளும் இல்லாளே ஆமாயின் - இல்லாள்
வலி கிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்இல்
புலி கிடந்த தூறாய் விடும்.

விளக்கம்:

ஒரு மனைவி நல்லவள் என்றால், அந்த வீட்டில் இல்லாத எதுவும் இல்லை. அவள் எல்லாவற்றிலிருந்தும் கணவனுக்கு நன்மை செய்வாள். மறுபுறம் அவள் நல்லவள் இல்லையென்றால் அந்த வீட்டில் எதுவும் இல்லை என்று அர்த்தம். ஆம், கணவர் வசிக்கும் வீடு புலி பதுங்கியிருக்கும் குகை போல இருக்கும்.

Description :

If a wife is good, there is nothing that is not in that home. She will benefit the husband from everything.  On the other hand, if she is not good means that there is nothing in that house at all. Yes, the house where the husband lives will be like a cave where the tiger lurks.



சனி, 10 ஜூலை, 2021

 

அவ்வையார் நூல்கள் (Avvaiyar Books)

மூதுரை (MOOTHURAI)

வெண்பா : 20

 

உடன் பிறந்தார் சுற்றத்தார் என்று இருக்க வேண்டா
உடன் பிறந்தே கொல்லும் வியாதி - உடன் பிறவா
மாமலையில் உள்ள மருந்தே பிணி தீர்க்கும்
அம் மருந்து போல் வாரும் உண்டு.

விளக்கம்:

 

உடன் பிறந்தோர் மட்டுமே உறவுகள் என்று இருக்க வேண்டாம், உடன் பிறந்தே கொள்ளும் வியாதிகளும் உண்டு,   எங்கோ பெரிய மலையில் இருக்கும் மூலிகை செடிகளில் இருந்து கிடைக்கும் மருந்து நம் நோயை தீர்ப்பது போல, உறவு அல்லாத அன்னியரும் நமக்கு நன்மை தருபவராக இருக்கக் கூடும்.

 

Description :

Don't think that own brothers/sisters are real relations; understand some diseases are born with. Some herbaceous plants are available from high hills which will cure our disease, so some just known, non-relatives can also benefit us.



வெள்ளி, 9 ஜூலை, 2021

                             அவ்வையார் நூல்கள் (Avvaiyar Books)

மூதுரை (MOOTHURAI)

வெண்பா : 19

                         ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல் நீர்

நாழி முகவாது நானாழி - தோழி
நிதியும் கணவனும் நேர் படினும் தம்தம்
விதியின் பயனே பயன்.

விளக்கம்:

 

தோழி! எவ்வளவு தான் அமுக்கி, பெரும் கடலிலே
முகந்தாலும், ஒரு நாழி (படி) அளவுள்ள பாத்ரம் நான்கு படி நீரை
முகவாதுநல்ல கணவனும், செல்வமும் நிறைந்திருந்தும் நமக்குக்
கிடைக்கும் சுகத்தின் அளவும் அதைப் போன்றதேஅது நம் முன்
ஜன்ம நல் வினைகளின் அளவைப் பொறுத்தது.

 

Description :

Dude! how you press deeper in the ocean, you can not take more water than the size of the vessel. Likewise even you have a beloved husband and a lot of wealth, the amount of comfort and happiness available in life is similar to the blessing of ancestors.

 


வியாழன், 8 ஜூலை, 2021

                                 அவ்வையார் நூல்கள் (Avvaiyar Books)

மூதுரை (MOOTHURAI)

வெண்பா : 18

 சீரியர் கெட்டாலும் சீரியரே; சீரியர் மற்று

அல்லாதார் கெட்டால் அங்கு என்னாகும்? - சீரிய
பொன்னின் குடம் உடைந்தால் பொன்னாகும்; என் ஆகும்
மண்ணின் குடம் உடைந்தக் கால்?

 

விளக்கம்:

பொன்னால் செய்த குடம் உடைந்துவிட்டால் பொன்னாகவே இருந்து மீண்டும் உதவும். அதுபோலச் சிறந்த பண்பாளர் வறுமை அடைந்தாலும் சீரியராகவே விளங்கி மீண்டும் உதவுவர். மண்ணால் செய்த குடம் உடைந்தால் மீண்டும் மண் ஆகுமா? ஆகாமல் உதவாத, மக்காத ஓடாக அல்லவா மாறிவிடும். அதுபோலச் சீரியர் அல்லாதவர் உடைந்துபோனால் மீண்டும் உதவமாட்டார்.

Description :

If the pot made of gold is broken, it will help by restoring the gold again. In the same way, a good person will help even at the time of poverty. If the pot made of clay breaks, will it become soil again? Similarly, a person who is not of high character will not help again if he is broken.



புதன், 7 ஜூலை, 2021

                                     அவ்வையார் நூல்கள் (Avvaiyar Books)

மூதுரை (MOOTHURAI)

வெண்பா : 17

 

அற்ற குளத்தில் அறு நீர்ப்பறவை போல்
உற்றுழித் தீர்வார் உறவு அல்லர்; அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறுவார் உறவு

விளக்கம்:

 

நீர் அற்றுப்போன குளத்தை விட்டு நீர்ப்பறவைகள் நீங்கிவிடும். அதுபோலத் துன்பம் வந்த காலத்திலில் விலகிப் போய்விடுபவர் உறவினர் ஆகமாட்டார். நீர் அற்றுப்போனாலும் அந்தக் குளத்தில் கொட்டி, ஆம்பல், நெய்தல் போன்ற பூக்கொடிகள் ஒட்டிக்கொண்டே இருப்பது போலத் துன்பம் வந்த காலத்திலும் துணைநின்று உதவுபவரே உறவுக்காரர் ஆவார்.

 Description :

When the water dries up, the water-birds fly away from the pond. Like that one who does not support at times of distress is not really relative. Even at the time of water had dried up, some flowering plants such as the amber, lily are still sticking with the pond, like that some relative is always being supportive as ever.



செவ்வாய், 6 ஜூலை, 2021

                                  அவ்வையார் நூல்கள் (Avvaiyar Books)

மூதுரை (MOOTHURAI)

வெண்பா : 16

 

அடக்கம் உடையார் அறிவிலர் என்று எண்ணிக்
கடக்கக் கருதவும் வேண்டா - மடைத் தலையில்
ஓடுமீன் ஓட உறுமீன் வரும் அளவும்
வாடியிருக்குமாம் கொக்கு
விளக்கம்:

 

நீர் பாயும் தலை மடையில் பல சிறு மீன்கள் ஓடிக் கொண்டிருந்தாலும், கொக்கு வாடியிருப்பதைப் போலக் காத்துக்
கொண்டிருக்கும்எது வரை? தனக்குரிய பெரிய மீன் வரும் வரைஅதைப் போலவே அறிஞர்களின் அடக்கமும்அதைக் கண்டு அவர்களை அலக்ஷ்யம் செய்து வென்று விட நினைக்கக்கூடாது.


Description :

Although there are many small fishes passing over the canal the crane is still waiting. How long? Until the exact one it needed, likewise, Don’t underestimate the scholar's tolerance and silence, they are waiting for their exact chance to achieve.



ஔவையார் பாடல்கள்

  ஔவையார் பாடல்கள் ஆத்தி சூடி 106. வேண்டி வினை செயேல் தெரிந்தே தீய செயல்களை செய்யாதே.   107. வைகறைத் ...