செவ்வாய், 20 செப்டம்பர், 2022

ஔவையார் பாடல்கள்

ஔவையார் பாடல்கள்



ஆத்தி சூடி

 

21. நன்றி மறவேல்

ஒருவர் உனக்கு செய்த உதவியை ஒரு போதும் மறவாதே.

22. பருவத்தே பயிர் செய்

எச்செயலையும் அதற்குரிய காலத்திலேயே தெளிவாக செய்ய வேண்டும்.

23. மண் பறித்து உண்ணேல்

பிறர் நிலத்தை அபகரித்து அதன் மூலம் உண்டு வாழாதே

 

24. இயல்பு அலாதன செயேல்

நல்லொழுக்கத்துக்கு மாறான செயல்களைச் நீ செய்யாதே.

25. அரவம்ஆடேல்

பாம்புகளை பிடித்து நீ விளையாடாதே.

 

திங்கள், 19 செப்டம்பர், 2022

ஔவையார் பாடல்கள்

 

                        ஔவையார் பாடல்கள்



ஆத்தி சூடி

 

16. சனி நீராடு

சனிக்கிழமை தோறும் எண்ணெய் தேய்த்துக் குளிக்கவும். சனி நீர் என்றால் குளிர்ந்த நீர் என பொருள். எனவே குளிர்ந்த நீரில் குளி எனவும் பொருள்படும்

17. ஞயம் பட உரை


கேட்பவருக்கு இன்பம் உண்டாகும் படி இனிமையாக பேசு.

18. இடம் பட வீடு எடேல்

உன் தேவைக்கு மேல் வீட்டை பெரிதாக கட்டாதே.

19. இணககம்அறிந்து இணங்கு

ஒருவரிடம் நட்பு கொள்ளும் முன்,அவர் நல்ல குணங்களும்,நல்ல செய்கைகளும் கொண்டவரா எனத் தெரிந்த பிறகு அவருடன் நட்பு கொள்ளவும்.

20. தந்தை தாய்ப் பேண்

உன் தந்தையையும் தாயையும் அவர்களுடைய முதுமைக் காலம் வரை அன்புடன் காப்பாற்று.

ஞாயிறு, 18 செப்டம்பர், 2022

ஔவையார் பாடல்கள்

 


ஔவையார் பாடல்கள்



ஆத்தி சூடி

 


11.
ஓதுவது ஒழியேல்

நல்ல நூல்களை எப்பொழுதும் படித்துக்கொண்டிரு.

12. ஔவியம் பேசேல்


ஒருவரிடமும் பொறாமை கொண்டு பேசாதே.

13. அஃகஞ் சுருக்கேல்


அதிக இலாபத்துக்காக, தானியங்களை குறைத்து அளந்து விற்காதே.

14. கண்டு ஒன்று சொல்லேல்


கண்ணாற் கண்டதற்கு மாறாகப்(பொய் சாட்சி) சொல்லாதே.

15. ஙப் போல்வளை


'
' என்னும் எழுத்தானது எப்படி தான் பயன்னுள்ளதாக இருந்து தன் வருக்க எழுதுக்களை தழுவுகிறதோ அது போல நாமும் நம்மைச் சார்ந்தவர்களால் என்ன பயன் என்று பாராமல் அவர்களை காக்க வேண்டும்."" என்னும் எழுத்தை கூர்ந்து நோக்கினால், ஒருவர் வளைந்து வணக்கம் சொல்வது போல் உள்ளது விளங்கும். அதைப்போல பணிவாக பெரியவர் முன் வளைய வேண்டும் என்று ஔவை உரைத்ததாகவும் எடுத்துக்கொள்ளலாம்.



சனி, 17 செப்டம்பர், 2022

ஔவையார் பாடல்கள்

 

ஔவையார் பாடல்கள்


ஆத்தி
சூடி



6. ஊக்கமது கைவிடேல்

எப்போதும் முயற்சியைக் கைவிடக்கூடாது.

7. எண் எழுத்து இகழேல்

கணித, இலக்கண நூல்களைத் தினமும் தவறாமல் நன்கு கற்க வேண்டும்.

8. ஏற்பது இகழ்ச்சி

இரந்து வாழ்வது இழிவானது. அதனால் பிறரிடம் யாசிக்கக் கூடாது.

9. ஐயம் இட்டு உண்

உணவு யாசிப்பவர்கட்கு பிச்சையிட்டுப் பிறகு உண்ண வேண்டும்.

10. ஒப்புரவு ஒழுகு

உலக நடையை அறிந்துகொண்டு, அத்தோடு பொருந்துமாறு நடந்துகொள்.

வெள்ளி, 16 செப்டம்பர், 2022

ஔவையார் பாடல்கள்


ஆத்தி
சூடி

 

1. அறஞ் செய விரும்பு

நீ தருமத்தை(கடமையை)ச் செய்ய ஆவல் கொள்.


2. ஆறுவது சினம்

கோபம் (சினம்)  தணிக்கப்பட வேண்டியதாகும்.

3. இயல்வது கரவேல்

உன்னால் கொடுக்கக்கூடிய பொருளை யாசிப்பவர்க்கு மறைக்காமல்  கொடு.


4. ஈவது விலக்கேல்



ஒருவர் மற்றவர்க்கு கொடுப்பதை, வேண்டாமென்று நீ தடுக்காதே.

5. உடையது விளம்பேல்

உன்னிடத்திலுள்ள பொருளை அல்லது இரகசியங்களை பிறர் அறியுமாறு சொல்லாதே.


செவ்வாய், 20 ஜூலை, 2021

 

            அவ்வையார் நூல்கள் (Avvaiyar Books)

மூதுரை (MOOTHURAI)

வெண்பா : 30

 

சாந்தனையும் தீயனவே செய்திடினும் தாம் அவரை
ஆந்தனையும் காப்பர் அறிவுடையோர் - மாந்தர்
குறைக்கும் தனையும் குளிர் நிழலைத் தந்து
மறைக்குமாம் கண்டீர் மரம். 

விளக்கம்:

அறிவுடையோர் யார்? சாகும் வரையில் ஒருவர் கெடுதியையே செய்தாலும், தன்னால் முடிந்த வரையில் அவரைக் காப்பாற்றுபவரே அறிவுடையார் ஆவார். மரம் தான் சாயும் வரையில் தன்னை வெட்டுபவனுக்குக் குளிர்ந்த நிழலைத் தந்து அவன் குற்றத்தை மறைப்பதைப் பாருங்கள். அப்படித்தான் இருக்க வேண்டும்.

Description :

Who are the great/gentle? Even if one does evil until death, the one who saves him as much as he can is great/gentle. Look at the tree covering its guilt by giving a cool shade to the one who cut it until it dies.



ஔவையார் பாடல்கள்

  ஔவையார் பாடல்கள் ஆத்தி சூடி 106. வேண்டி வினை செயேல் தெரிந்தே தீய செயல்களை செய்யாதே.   107. வைகறைத் ...