செவ்வாய், 4 அக்டோபர், 2022

ஔவையார் பாடல்கள்

 

ஔவையார் பாடல்கள்

ஆத்தி சூடி





91. மீதூண் விரும்பேல்

மிகுதியாக உண்ணுதலை விரும்பாதே.

92. முனைமுகத்து நில்லேல்

எப்போதும் யாருடனாவது சண்டையிடுவதற்காக போர் முனையிலே நிற்காதே.

93 மூர்க்கரோடு இணங்கேல்

மூர்க்க (அல்லது) மூட குணம் கொண்டவர்கள் உடன் பழகாதே.

94. மெல்லி நல்லாள் தோள் சேர்

பிற மாதரை விரும்பாமல் உன் மனைவியுடன் மட்டும் சேர்ந்து வாழ்.

95. மேன் மக்கள் சொல் கேள்

நல்லொழுக்கம் உடைய பெரியோர் சொல்லைக் கேட்டு நட.

திங்கள், 3 அக்டோபர், 2022

ஔவையார் பாடல்கள்

 



ஔவையார் பாடல்கள்

ஆத்தி சூடி





86. பொருள்தனைப் போற்றி வாழ்

நீ பெற்ற பொருள் அல்லது செல்வதை பாதுகாத்து வாழ்.

 

87. போர்த் தொழில் புரியேல்

யாருடனும் தேவையில்லாமல் சண்டை பொடுவதை ஒரு வேலையாக செய்யாதே.

 

88. மனம் தடுமாறேல்

எதனாலும் மனக்கலக்கம் அடையாதே.

89. மாற்றானுக்கு இடம் கொடேல்

பகைவன் உன்னை துன்புறுத்தி உன்னை வெல்வதற்க்கு இடம் கொடுக்காதே.

90. மிகைபடச் சொல்லேல்

சாதாரணமான விஷயத்தை பெரிதாகக் கூறாதே.

ஞாயிறு, 2 அக்டோபர், 2022

ஔவையார் பாடல்கள்

 

ஔவையார் பாடல்கள்

ஆத்தி சூடி

                                                    


81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ்

உன்னையே நம்பியவர்களை காப்பாற்றி வாழ்.

82. பூமி திருத்தி உண்

விளைநிலத்தை உழுது அதில் பயிர்செய்து உண்.()விவசாயத்தை வாழ்க்கை தொழிலாகக் கொள்.

83. பெரியாரைத் துணைக் கொள்

அறிவிலே சிறந்த பெரியோர்களை உனக்குத் துணையாகப் பேணிக்கொள்.

84. பேதமை அகற்று

அறியாமையை போக்கு.

85. பையலோடு இணங்கேல்

அறிவில்லாத கீழோரோடு கூடித் திரியாதே.

சனி, 1 அக்டோபர், 2022

ஔவையார் பாடல்கள்

 

ஔவையார் பாடல்கள்

ஆத்தி சூடி





76. நோய்க்கு இடம் கொடேல்

நோய்க்கு வாய்ப்பளிக்கும் எந்த செயலையும் செய்யாதே.

 

77. பழிப்பன பகரேல்

மூத்தோர்கள் பழிக்கும் எந்த இழிவான சொற்களான பொய்,கடுஞ்சொல் ஆகியவற்றை பேசாதே.

78. பாம்பொடு பழகேல்

பாம்புபோல கொடிய குணம் கொண்டவர்கள் உடன் பழகாதே.

79. பிழைபடச் சொல்லேல்

குற்றம் உண்டாகும் படி எதையும் பேசாதே.

80. பீடு பெற நில்

பெறுமையை அடையும் படியான நல்ல நிலையிலே நில்.

வெள்ளி, 30 செப்டம்பர், 2022

ஔவையார் பாடல்கள்

 

ஔவையார் பாடல்கள்

ஆத்தி சூடி




71. நூல் பல கல்

அறிவை வளர்க்கும் பல நூல்களைப் படி.

72. நெல் பயிர் விளை

நெற்பயிரை விளையச் செய்வதை உன் வாழ்க்கை தொழிலாகக் கொண்டு வாழ்.

73. நேர்பட ஒழுகு

ஒழுக்கந் தவறாமல் நேர்வழியில் நட.

74. நைவினை நணுகேல்

பிறர் வருந்தத் தகுந்த தீ வினைகளைச் செய்யாதே.

75. நொய்ய உரையேல்

பயன் இல்லாத அற்ப வார்த்தைகளைப் பேசாதே.

வியாழன், 29 செப்டம்பர், 2022

ஔவையார் பாடல்கள்

 

ஔவையார் பாடல்கள்

ஆத்தி சூடி

 


66. நன்மை கடைப்பிடி

நல்வினை செய்தலை எவ்வளவு இடையுறு வந்தாலும் உறுதியாகத் தொடரவும்.

67. நாடு ஒப்பன செய்

நாட்டில் உள்ள பலரும் ஒத்துக்கொள்ளத்தக்க நல்ல காரியங்களை செய்.

68. நிலையில் பிரியேல்

உன்னுடைய நல்ல நிலையில் இருந்து என்றும் தாழ்ந்து விடாதே.

69. நீர் விளையாடேல்

வெள்ளத்தில் ஆபத்தை உணராமல் நீந்தி விளையாடாதே.

70. நுண்மை நுகரேல்

நோயைத் தரும் சிற்றுண்டிகளை அதிகமாக உண்ணாதே.

புதன், 28 செப்டம்பர், 2022

ஔவையார் பாடல்கள்

 

        ஔவையார் பாடல்கள்

ஆத்தி சூடி

 


61. தெய்வம் இகழேல்

(அல்லது) சான்றோரை கடவுளை பழிக்காதே.

62. தேசத்தோடு ஒத்து வாழ்

ஊராருடன் பகை இல்லாமல் ஒத்து வாழ்.

 

63. தையல் சொல் கேளேல்

மனைவி சொல் கேட்டு ஆராயாமல் நடவாதே.

64. தொண்மை மறவேல்

நம்முள் நிலவும் பழமை மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றை மறந்துவிடாதே.

65. தோற்பன தொடரேல்

ஒரு செயலைச் செய்தால் தோல்வியில் தான் முடியும் எனத் தெரிந்தே அதை தொடராதே

ஔவையார் பாடல்கள்

  ஔவையார் பாடல்கள் ஆத்தி சூடி 106. வேண்டி வினை செயேல் தெரிந்தே தீய செயல்களை செய்யாதே.   107. வைகறைத் ...