ஔவையார் பாடல்கள்
ஆத்தி சூடி
|
91. மீதூண் விரும்பேல் |
மிகுதியாக உண்ணுதலை விரும்பாதே.
|
92. முனைமுகத்து நில்லேல் |
எப்போதும் யாருடனாவது சண்டையிடுவதற்காக போர் முனையிலே நிற்காதே.
|
93 மூர்க்கரோடு இணங்கேல் |
மூர்க்க (அல்லது) மூட குணம் கொண்டவர்கள் உடன் பழகாதே.
|
94. மெல்லி நல்லாள் தோள் சேர் |
பிற மாதரை விரும்பாமல் உன் மனைவியுடன் மட்டும் சேர்ந்து வாழ்.
|
95. மேன் மக்கள் சொல் கேள் |
நல்லொழுக்கம் உடைய பெரியோர் சொல்லைக் கேட்டு நட.






